திருமலை: ஒன்பது மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த ஆசாமியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அனுகொண்டாவில் டெய்லர் தெருவில் தாபா நடத்தி வருபவர் ஜெகன். இவரது மனைவி அர்ச்சனா. இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு தாபாவின் மாடியில் தங்களது 9 மாத குழந்தை சிரிதாவுடன் தூங்கினர். நள்ளிரவு 1 மணியளவில் பார்த்த அர்ச்சனா அருகில் படுத்திருந்த குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கணவன், மனைவி இருவரும் குழந்தையை பல இடங்களில் தேடினர். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.