சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணம் ரூ.23 லட்சத்தை கையாடல் செய்த முன்னாள் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். செம்மஞ்சேரி காமராஜ் நகரில் பர்கத் பானவை(22) கைது செய்த போலீசார் ரூ.8 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். பணத்தை தனது உறவினர் கணக்கிற்கு மாற்றிய பானு அதை வைத்து ஆடம்பரமாக திருமணம் செய்தது அம்பலமாகியுள்ளது.