திருமலை : திருமலையில் மாநில வனத்துறை, தேவஸ்தான வனத்துறை, திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, திருப்பதி புறநகர் காவல் மாவட்ட போலீசாருக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று நடந்தது. தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் கோபிநாத்ஜெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருமலைக்கு வரக்கூடிய மலைப்பாதையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் 2 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மாநில வனத்துறை சார்பில் தேவஸ்தான அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகளை வழங்கினர். திருப்பதி மலைப்பாதை, வெங்கடேஸ்வரா தேசிய வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் புலி, சிங்கத்தை தவிர மற்ற அனைத்து வகையான விலங்குகளும் உள்ளது. குறிப்பாக 27 முதல் 35 சிறுத்தைகளும், 35க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் அனைத்து விதமான விலங்குகள் சேஷாசல வனப்பகுதியில் உள்ளது.