காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கழிவறையை பராமரிக்க தண்ணீர் இல்லாததால் அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. எங்கு திரும்பினாலும் வறட்சியான நிலையே காணப்படுகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட நகர வாசிகளும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து ஐடி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்னன. தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.