கெத்தையில் காட்டுத்தீ 30 ஏக்கர் நாசம்

மஞ்சூர்:  நீலகிரி  மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மஞ்சூர்-கெத்தை சாலையில் உள்ள வனப்பகுதியில்  திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் இருந்த  வனப்பகுதியில் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த குந்தா வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் விரைந்து  சென்று தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  நீண்ட  போராட்டத்திற்குபின் நேற்று பகல் 12 மணியளவில் தீயை அணைத்தனர். இதில் வருவாய் மற்றும் தனியாருக்கு சொந்தமான 30  ஏக்கர் வனப் பகுதி நாசமானதாக வனத்துறையினர்  தெரிவித்தனர்.

Related Stories: