ஐதராபாத்: பாஜ.வின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் வெறும் பகட்டுதான், நடைமுறைக்கு ஒத்துவராது என இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. இவற்றை தனித்தனியாக நடத்துவதால் தேர்தல் ஆணையத்துக்கு பணிச்சுமை மட்டுமின்றி, தேர்தல் செலவும் அதிகமாகின்றன. இதை தவிர்க்க, ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கொள்கையை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.