கோவை: கோவையில் கல்லூரி மாணவிக்கு தவறான சிகிச்சையளித்த சித்த வைத்தியரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் புதூரில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேஷன் மற்றும் மல்லிகா தம்பதியினர். இவர்களது மகளான சத்தியப்பிரியா(20) கோவை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஓராண்டாக மாதவிடாய் பிரச்சனை இருந்ததன் காரணமாக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், அந்த சிகிச்சைகள் பலனளிக்காத காரணத்தால் அவரது உறவினர்களின் ஆலோசனைப்படி கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த குருநாதன் என்ற சித்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனலிக்கவில்லை என்று தெரிகிறது. எனவே, சித்த வைத்தியர் தவறான சிகிச்சையளித்தாக கூறி மாணவியின் பெற்றோர் செல்வபுரம் காவல்நிலையத்தில் கடந்த மாதமே புகாரளித்துள்ளனர்.