புதுடெல்லி: இளநிலை மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ் முடித்தவர்களுக்கு புதிய தகுதித்தேர்வை கொண்டு வருவதற்கான மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. தற்போது எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் National Exit Test எனப்படும் நெக்ஸ்ட் தகுதித் தேர்வை கட்டாயமாக்கிட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்தாண்டிலேயே இந்த தேர்வை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது. இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான மசோதா தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட உள்ளது.