சென்னை: பாண்டிபஜார் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவலர் கார்த்திகேயன் (32) நேற்று முன்தினம் நள்ளிரவு வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் வள்ளுவர் கோட்டம் மேம்பாலம் அருகே, காரில் வந்த 4 பேர், சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த காவலர் கார்த்திகேயன், இங்கு நிற்க கூடாது என்று கூறி அவர்களை அனுப்பினார்.ஆத்திரமடைந்த 4 பேரும் காவலரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். மேலும், காவலர் வைத்திருந்த லத்தியை பிடுங்கி சரமாரியாக அடித்து உதைத்தனர்.