சாராய வியாபாரியிடம் லஞ்சம் கேட்ட சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்

கொள்ளிடம்: நாகை மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சேகர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கொள்ளிடம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வரும் ஒருவரிடம் மாமூல் கேட்டு போனில், மாதம் 2000, 3000 தேவையில்லை. முன்பு போலீஸ் 15 பேர்தான் இருந்தோம். இப்போ 25 பேர் இருக்கிறோம். மாதம் இன்ஸ்பெக்டருக்கு 5000, போலீசுக்கு 5000 கொடுக்கற மாதிரி இருந்தா விற்கட்டும். இல்லையென்றால் விற்கவேண்டாம் என்று பேசிய உரையாடல் “வாட்ஸ்அப்”பில் பரவியது.  இதனையடுத்து, சேகரை சஸ்பெண்ட் செய்து நாகை எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: