கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் சாராய வியாபாரியை மிரட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணம் கேட்கும் செய்தி வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. நாகை மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் என்பவர் கொள்ளிடம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்றுவரும் ஒருவரை மாமூல் கேட்டு மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அந்த நபர் செல்போனில், எஸ்.எஸ்.ஐ.சேகரிடம் ``நான் சொல்லிதான் நீங்க அவரை விட்டுட்டு போகலையே. பாவம் சார் அவன். அதற்கு பதில் அளித்த எஸ்.எஸ்.ஐ.சேகர், மறுநாளோ 3ம் நாளோ போலீஸ்டேசன் வந்திருக்கிறான். அப்பகூட அவன் என்னை பார்க்கவில்லை. எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவும் இல்லை.