ராஜராஜசோழனை பற்றி கருத்து இயக்குனர் ரஞ்சித் மீது போலீசார் வழக்குப்பதிவு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் 5ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், இந்துக்கள், தமிழர்கள், ராஜராஜசோழன் பற்றி பேசினார். இதனால் வன்முறை தூண்டும் விதமாக பா.ரஞ்சித் பேசியுள்ளார் என திருவிடைமருதூர் டிஎஸ்பியிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் பா.ரஞ்சித் மீது கலகம் செய்வது, தூண்டி விட்டு கலகம் ஏற்படுத்துவது, மதம், இனம், மொழி சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சி செய்வது என (153, 153(ஏ) ஆகிய பிரிவின்கீழ் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: