பிரிஸ்டல்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை - வங்கதேசம் அணிகளிடையே நடக்க இருந்த லீக் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது. பிரிஸ்டல் கவுன்டி கிளப் மைதானத்தில் நேற்று போட்டி தொடங்க இருந்த நிலையில், முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக டாஸ் போடுவது தாமதமானது. களத்தை மூடியிருந்த தார்பாய்கள் அகற்றப்பட்டு ஆட்டம் குறித்த நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தூறலாகத் தொடங்கி கனமழையாக கொட்டித் தீர்க்க... மைதானம் மீண்டும் குளமானது.