சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் வைகாசி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.