சேலம்: சேலத்தில் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு ஏற்கனவே உய்ரநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது மேலும் அதே தடையை உச்சநீதிமன்றமும் நீடித்து இருக்கிறது. இந்த நிலையில் எட்டுவழிச்சாலையை அமைத்தே தீருவேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசி வருவதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ச்சியான ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும் மார்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.