ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் புள்ளிமான் கோம்பை, திம்மரசநாயக்கனூர், ஏத்தக்கோவில், வரதராஜபுரம், பாலக்கோம்பை, ஜி.உசிலம்பட்டி, குன்னூர், கோவில்பட்டி உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் ஏராளமானோர் அலுவல் காரணமாகவும், சொந்த வேலையாகவும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.