கோவை அருகே விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

கோவை: சோமனூர் அருகே விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செம்மாண்டம் பாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: