பெரம்பூர்: வியாபாரியை காரில் கடத்திய ஆசாமி விபத்தில் சிக்கி பலியானார். பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொடுங்கையூர் லக்ஷ்மி நகரை சேர்ந்தவர் அப்துல் கரீம் (35). பழைய கார்களை வாங்கி விற்பவர். இவரது மனைவி ஆயிஷா (32). நேற்று முன்தினம் காலை எம்கேபி நகரை சேர்ந்த ரசூல் கான் மற்றும் 2 பேர் சேர்ந்து அப்துல் கரீமிடம் பேசி தனியாக அழைத்து சென்றனர். வெகுநேரமாக அப்துல் கரீம் வராததால் ஆயிஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது கணவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றம் அடைந்த ஆயிஷா கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில் ரசூல் கான் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். அவரிடம் அப்துல் கரீம் ₹10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால், அதை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதில் ரசூல் கான், அப்துல் கரீமை காரில் கடத்தியது தெரிந்தது.