திருத்துறைப்பூண்டி: அதிமுக உட்கட்சி பூசலால் அரசு நிர்வாகம் முடங்கி கோமா நிலையில் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நேற்று அளித்த பேட்டி: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மாநில அரசு மவுனம் சாதிப்பது, மத்திய அரசுக்கு உடந்தையாக இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதை மாநில அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி விழுப்புரம், ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமும் வெகுவாக பாதிக்கப்படும்.