திருச்சி : மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலையை அவரது சொந்த ஊரான அன்பிலில் திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது 100வது பிறந்த நாளை முன்னிட்டு 500 கிலோ எடையுடன் 7 அடி உயர வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டது. அதனை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அன்பில் தர்மலிங்கம் நூற்றாண்டு மலர் புத்தகத்தை ஸ்டாலின் வெளியிட அதனை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக் கொண்டார். ஐ. பெரியசாமி, சுப தங்கவேலன், திருச்சி எம்பி சிவா, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை போலவே அன்பில் தர்மலிங்கத்தின் வழியில் செயல்பட்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்றார்.