கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ தொண்டர்கள் இடையே அடிக்கடி அரசியல் ரீதியாக மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டது. பாஜ.வில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் சந்தேஷ்காலி பகுதியில் பாஜ - திரிணாமுல் இடையே மோதல் ஏற்பட்டது. கட்டிடம் ஒன்றில் இருந்த பாஜ சின்னத்தை திரிணாமுல் காங்கிரசார் நீக்கியதால் ஆத்திரமடைந்த பாஜ.வினர், திரிணாமுல் காங்கிரசாருடன் வாக்குவாதம் செய்தனர்.