புதுடெல்லி: சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொட ங்க இந்தியாவும், மாலத்தீவும் சம்மதித்துள்ளன. பிரதமர் மோடி 2வது முறையாக பதவியேற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று முன்தினம் மாலத்தீவு சென்றார். அந்நாட்டு அதிபர் இப்ராகிம் சோலியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இரு நாடுகள் இடையே கப்பல் போக்குவரத்து, சுகாதாரம், பாதுகாப்பு உட்பட 6 ஒப்பந்தங்கள் கைெழுத்தானது. இதன் அடிப்படையில், கொச்சி-மாலே இடையே உள்ள 700 கி.மீ தூரத்துக்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை விரைவாக தொடங்க, இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்த கப்பல் மாலத்தீவின் தென் பகுதியில் உள்ள குல்குதுபுசி அடோல் வழியாக மாலே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.