வாஷிங்டன்: அமெரிக்க விமானப்படையில் டர்பன் அணிந்து பணிக்கு வருவதற்கு சீக்கிய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஹர்பீரிந்தர் சிங் பஜ்வா. இவர், கட,ந்த 2017ம் ஆண்டு அமெரிக்க விமான படையில் சேர்ந்தார். ஆனால், அங்கிருக்கும் வீரர்கள் சேவையாற்றும் போது தாடி வைக்கவும், டர்பன் அணியவும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், அதனை பின்பற்ற இயலாமல் சிரமம் அடைந்தார். இந்நிலையில், அமெரிக்க சீக்கியர் முன்னாள் படை வீரர்கள் சங்கமும், அமெரிக்க மனித உரிமை சங்கமும் இணைந்து அங்கீகாரம் அளித்ததை தொடர்ந்து, டர்பன் அணிந்தும், தாடி வைத்தும் முழு நேர பணியில் ஈடுபட பஜ்வாவுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.