மும்பை: பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை 554 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. இந்திய பங்குச்சந்தைகள் நேற்று காலையிலேயே சரிவுடன் துவங்கின. மதியத்துக்கு மேல் கடும் சரிவை சந்தித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக இடையில் 40,159.26 என்ற உச்சத்தை தொட்டாலும், வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 553.82 புள்ளி சரிந்து 39,529.72 புள்ளிகளாக இருந்தது.
இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 177.9 புள்ளிகள் சரிந்து 11,843.75 புள்ளிகளாக இருந்தது.