தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை வி.பி.கோயில் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஷித் (34). வியாபாரி. இவர், நேற்று முன்தினம் இரவு, ₹8 லட்சத்தை எடுத்து கொண்டு பாரிமுனைக்கு பைக்கில் புறப்பட்டார். அப்போது அவரை பின்தொடர்ந்து இன்னொரு பைக்கில் வந்த 2 பேர், திடீரென அப்துல் ரஷித்திடம் இருந்து பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசில் அப்துல் ரஷித் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், அப்துல் ரஷித்தின் அண்ணன் கவுஸ் என்பவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.