கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உருட்டு கட்டையால் தந்தை தாக்கியதில் மகன் பரிதாபமாக பலியானார். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரவள்ளூரை சேர்ந்தவர் ரவி(61). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனர். திருமணமான இவரது மகன் ஹரிதாஸ்(35), சோழவரம் ஒன்றியம் இருளிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் இணைந்து அரசு நிதியுதவி மூலம் வீடுகட்டும் திட்டத்தின்கீழ், புதிதாக வீடு கட்டி வருகின்றனர். அதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.