சென்னை: திமுக எம்பி கனிமொழி, தூத்துக்குடியில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிய கல்வி திட்டத்தில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக இந்தியை கட்டாயமாக திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதை கண்டிக்கிறோம். எந்த காலத்திலும் எந்த ஒரு மொழியையும் கட்டாயமாக திணிப்பதை திமுக எதிர்க்கும். நாடாளுமன்றத்திலும் இதுபற்றி குரல் எழுப்புவோம். திமுகவை பொறுத்தவரையில் ஒரு எம்பி இருந்தபோதுகூட நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது.