சென்னை: மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தி ஆனைக்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (55). விவசாயி. இவரது மனைவி மலர் (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கன்னியப்பனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர், தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கன்னியப்பன் வேலை முடிந்து வீடு திரும்பும்போது போதையில் இருந்தார். இதனால், மீண்டும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மலர், வீட்டின் சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து, கணவன் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.