சென்னை: அகில இந்திய ஹீரோ சப்-ஜூனியர் கால்பந்து போட்டியில் அசத்தலாக விளையாடிய சென்னை சிறுவனால் மும்பையின் ஆர்எப்ஓசி அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோவாவில் அகில இந்திய ஹீரோ சப் ஜூனியர் கால்பந்து லீக் போட்டி நடைப்பெற்றது. இறுதிப்போட்டியில் மும்பை சிட்டி எப்சி அணியான ரிலையன்ஸ் பவுண்டேஷன் யங் சாம்ப்ஸ்(ஆர்எப்ஓய்சி) அணியும், பெங்களூர் கால்பந்து கிளப் அணியும் மோதின. அதில் ஆர்எப்ஓய்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் திருமலை. இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆர்எப்ஓய்சி அணி வெற்றி பெற்றதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.