லாகூர்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மற்றும் அவர்களுக்கு நிதி வழங்குவோரை கைது செய்கின்றனர். பயங்கரவாத அமைப்புக்கு உதவியதாக பலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட இப்திகார், முகமது அஜ்மல் மற்றும் பிலால் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நேற்று நிரூபிக்கப்பட்டது.