ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சோபியான்: சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிககளுக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள டிரகாட் சுகன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் சுகன் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் இதற்கு தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் இரு தரப்பினருக்கும் இடையே தீவிர தாக்குதல் நடைபெற்று வந்தது.

அப்போது பயங்கரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினர் பிடியில் சிக்கி சுட்டுக்கொல்லப்பட்டான். அதை தொடர்ந்து மீண்டும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல நேற்று, 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் எதிர்பாராத விதமாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டள்ளது. இதையடுத்து, சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: