சென்னை: சென்னையை அடுத்த எண்ணுரில் புதிய அனல்மின் நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எண்ணுரில் இயங்கி வந்த பழைய அனல்மின் நிலையம் மூடப்பட்டதையடுத்து புதிய அனல்மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டே மின் உற்பத்தியை தொடங்க வேண்டிய இந்த அனல்மின் நிலையத்தில் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. மேலும் மின்வாரியத்தின் இத்தகைய நிர்வாக சீர்கேடுகளால் தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.