அமெரிக்கா: பிரதான வர்த்தக கூட்டாளிகளின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து டிரம்ப் நிர்வாகம் இந்தியாவை அகற்றியது. வர்த்தக முன்னேற்றத்திற்காக மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, டாலருக்கு நிகரான கரன்சி மதிப்பை முறைகேடு செய்து மாற்றுவதாக சந்தேகிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. அந்நியச் செலாவணி தொடர்பான அரையாண்டு அறிக்கையை ஒன்றை அமெரிக்க நிதித்துறை அண்மையில் தாக்கல் செய்தது. 40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த 2018-ம் ஆண்டு அக்டொபர் மாதத்திற்கு பிறகு, இந்தியா-அமெரிக்கா இடையேயான அந்நியச் செலாவணியில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே, டாலருக்கு நிகரான கரன்சி மதிப்பை முறைகேடு செய்து மாற்றுவதாக, சந்தேகிக்கப்படும் பட்டியலில் இருந்து இந்திய கரன்சி நீக்கப்படுகிறது.