கொடைக்கானல்: கொடைக்கானலில் நாளை மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்குகிறது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இந்தாண்டு கோடை விழா நாளை துவங்கி ஜூன் 8ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு அங்கமாக பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும். வழக்கமாக 2 நாட்கள் மட்டுமே மலர் கண்காட்சி நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு 3 நாட்கள் நடத்த திட்டமிட்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மலர் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அரங்குகளில்தான் பல லட்சம் வண்ண மலர்கள் காட்சிக்கு வைக்கப்படும்.