இந்தியா- வங்கதேச எல்லையில் முதல் பேருந்து சேவை

டாக்கா : சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்தியா- வங்கதேச எல்லையில் முதன்முறையாக பேருந்து சேவை இயக்கப்பட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி வங்கதேசம் தலைநகர் டாக்காவிலிருந்து 13 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்று, நேற்று காலை இந்தியாவின் எல்லை பகுதியான ஜல்பைகுரி((jalpaiguri)) மாவட்டத்தை வந்தடைந்தது.

இந்தியா- வங்கதேச எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள், உறவினர்களை சந்திக்கவும், தொழில் சார்ந்த பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் வழியாக சென்று வருகின்றனர். தற்போது பயண தூரம் சுமார் 50 கிலோ மீட்டர் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories: