மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வெற்றிப் பேரணியில் கையெறி குண்டு வீச்சு

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க.வினரின் வெற்றிப் பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் 2014-ஆம் ஆண்டு 2 தொகுதிகளை மட்டுமே வென்ற பா.ஜ.க. இந்தத்தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் பிர்பும் மாவட்டம் மயூரேஸ்வர் என்ற இடத்தில் நேற்று பா.ஜ.க. சார்பில் வெற்றிப் பேரணி நடைபெற்றது.

அப்போது பேரணியில் சென்றவர்கள் மீது கையெறி குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது; திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், பாஜக. வினர் மீது கையெறி குண்டு வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Related Stories: