13 மாவட்ட மீனவர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கே கிடைத்தது

பெரம்பூர்: தமிழகத்தில், 13 மாவட்டங்களில் மீனவர்கள் வாக்குகள் சிதறாமல் திமுக கூட்டணிக்கு சென்றதால்தான், பாஜ இங்கு தோல்வியை தழுவியது என மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை, காசிமேடு தலைமை அலுவலகத்தில், பாரதிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் பிரபாகரன் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியாகி உள்ள நிலையில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது, மக்களவை தேர்தலுக்கு, திமுகவிற்கு ஆதரவளித்து, தலைவர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து, பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டோம். முக்கியமாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிய பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கும்படி, நம் சமுதாய மக்களிடம் ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டோம், அதன் பிரதிபலிப்பாக இன்று தமிழகத்தில், 13 மாவட்டங்களில், மீனவர்கள் வாக்குகள் எங்கும் சிதறாமல், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளது, அதை போன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்ந்து, மீனவர்கள் நலனுக்காக பாடுபடும் நேரம்  தொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

Related Stories: