விருதுநகரில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்காக மாறிய கிணறு

விருதுநகர்: விருதுநகர் ஏடிபி குடியிருப்பு பகுதியில் உள்ள திறந்தவெளி கிணற்றில் குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஏடிபி குடியிருப்பு பகுதியில் திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் கடைக்காரர்கள் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் தண்ணீர் மாசுபட்டு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. சாலையோரம் இருப்பதால் விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே கிணற்றின் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டுவதோடு இங்கு குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: