பீய்ஜிங்: செல்போன் வாங்கித்தராத காரணத்தால், காதலி ஒருவர் காதலனின் கன்னத்தில் 52 முறை அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை செர்ந்த இருவர், பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலன் மீது அதீத அன்பு வைத்திருந்த காதலி, காதலனின் பணத்தேவைக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, அவருக்கு தேவையானவற்றை வாங்கிக்கொடுத்துவந்துள்ளார். இந்நிலையில், சீன காதலர் தினத்திற்கு பரிசாக தனக்கு செல்போன் வாங்கித்தரும்படி காதலனிடம் காதலி கேட்டுள்ளார்.