புவனேஸ்வர்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 78 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒடிசாவின் புவனேஸ்வரை சேர்ந்த 25 வயதே ஆன பழங்குடியின இளம்பெண் சந்திராணி முர்மு மக்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வறுமையில் வாடும் மக்களுக்காகவும் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தனது தந்தை சஞ்சீவுடன் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை சந்திராணி செய்து வருகிறார். ஒடிசாவில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கியோஞ்சர் மக்களவை தொகுதியில் பிஜூ ஜனதா தளம் கட்சி சார்பில் சந்திராணி போட்டியிட்டார்.