காத்மண்டு: நேபாள தலைநகர் காத்மண்டுவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியாகினர். நேபாள தலைநகரான காத்மண்டுவில், அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடித்துள்ளது. சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.