சென்னை : இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேமுதிக சார்பில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தலில் அயராது பாடுபட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விஐயகாந்த் நன்றி தெரிவித்தார்.