புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக ெவற்றி பெற்றது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றார். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் வெங்கடேசன் (திமுக), நெடுஞ்செழியன் (என்ஆர் காங்கிரஸ்), கவுரி (நாம் தமிழர் கட்சி), முருகசாமி (அமமுக) உள்பட 8 வேட்பாளர்கள் ேபாட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது.