புதுடெல்லி: பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் ஜூன் 7ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ராணுவ வீரர்களின் ரத்தத்துக்கு பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொள்கிறார். அவர்களின் தியாகத்தை பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்,’ என கடந்த 2016ல் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் பேசினார். பிரதமரை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது பாஜ.வினர் புகார் அளித்தும் டெல்லி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.