டெல்லி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இருந்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடும் விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைப்பு போன்றவை திருப்தி அளிக்கிறதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.