வேன் - லாரி மோதி விபத்து 11 பேர் பரிதாப பலி

அனந்த்: குஜராத்தில் வேனும் ஆயில் டேங்கரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள பத்ராவில் இருந்து 22 பேரை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சாரோல் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது கம்பீரா கிராமத்தை கடக்கும்போது எதிரே வேகமாக வந்த ஆயில் டேங்கர் லாரியுடன் வேன் பலமாக மோதியது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாயினர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிற்சாலை ஊழியர்களாவர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் பர்சாத், வதோதராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய ஆயில் டேங்கர் லாரியின் டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: