திருவனந்தபுரம்: கேரளமாநிலம் திருவனந்தபுரத்தின் கிழக்கு கோட்டைப் பகுதியின் வணிக வளாக கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியே புகை மண்டலம் போல் காட்சி அளித்தது. எம் ஜி சாலையில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தின் குடோனில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீ மளமளவென வணிக வளாகத்திலும் பரவியதால் அப்பகுதியை புகை மண்டலம் சூழ்ந்தது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட 32 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.