விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது: முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

சேலம்: விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்தார். இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். மேலும் வறட்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது எனவும்  குடிநீர் பிரச்சனையை சமாளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார். இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: