சென்னை: தனியார் டிவி சேனல் ஒன்றில் பேசிய திருமாவளவன், காந்தி ஒரு தீவிரவாதி தான், அவர் இந்து மதத்தில் தீவிரமாக இருந்தார். கோட்சே ஒரு பயங்கரவாதி என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக தமிழக பாஜ தலைவர் தமிழிசை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருமாவளவனின் சுயரூபமும், மனநிலையும் வெளிப்பட்டுவிட்டது. சனாதன தர்மம் எதிர்ப்பு என்று பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் தேர்தல் வந்ததும், சிதம்பரத்தில் பக்தி பரவச வேடத்தில் சிவாச்சாரியர்களிடம் மண்டியிட்டு ஆசி வாங்கினார். நடிப்பில் கமலையும் மிஞ்சிவிட்டார். தமிழர்களுக்காக ரத்தக் கண்ணீர் சிந்துவதாக கூறினார். ஆனால் தமிழர்களை கொன்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவின் கைகளினாலேயே பரிசும் வாங்கி வந்தார்.