சொல்லிட்டாங்க...

* வாக்குப்பதிவு முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாக முடிவுக்காக காத்திருப்பது சரியான செயல் அல்ல. இது தொடர்பாக அனைத்து தலைவர்களுடனும் பேச உள்ளேன். - பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

* இந்தியாவில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மது அரக்கன் விஸ்வரூபம் எடுத்திருக்கிறான். இது தொடர்ந்தால் விரைவில் இந்தியா குடிகார நாடு என்ற பெயரைப் பெறும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

* தமிழகத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகள் உள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் பிரச்னைகளை யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் மக்கள் அகதிகள் போல் திரிகின்றனர். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

* அரசியலின் மையத்துக்கு வர நினைக்கும் கமல்ஹாசன் பேச்சுக்களை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். - முன்னாள் எம்பி ஞானதேசிகன்

Related Stories: